அழகான வரிகள்


நீரால் கோலம் போடாதே


நெற்றியைக் காலியாய் விடாதே


குச்சியைக் கொளுத்தி வீசாதே


இரவில் ஊசியை எடுக்காதே


கால் மேல் காலைப் போடாதே


காலையில் அதிகம் தூங்காதே


தொடையில் தாளம் போடாதே


தரையில் வெறுதே கிடக்காதே


மலஜலம் அடக்கி வைக்காதே


நகத்தை நீட்டி வளர்க்காதே


ஆலயம் செல்லத் தவறாதே


அதிகமாகப் பேசாதே


எண்ணெய் தேய்க்க மறக்காதே


சந்தியில் நீயும் உண்ணாதே


விரிப்பைச் சுருட்ட மறக்காதே


பகலில் படுத்து உறங்காதே


குளிக்கும் முன்பு புசிக்காதே


ஈரம் சொட்ட நிற்காதே


நாமம் சொல்ல மறக்காதே


நல்ல குடியைக் கெடுக்காதே


தீய வார்த்தை பேசாதே


நின்று தண்ணீர் குடிக்காதே


எதையும் காலால் தட்டாதே


எச்சில் பத்தை மறக்காதே


எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே


எந்தன் குடியில் மூத்தோரே


எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே


என்றும் வளமாய்த் தீர்வோரே


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்