கொரோனா வைரஸ் மனிதனை விட கொடூரமானது அல்ல
கொரோன வைரஸ் மனிதனை கொடூரமானது அல்ல என்பதை நமக்கு சிந்திக்க வைத்துள்ளது என்பது உண்மைதான்.
நம் பாரத நாட்டில் மருத்துவர்கள் வியாபாரம் நோக்கமின்றி தர்மம் என்ற நிலையில் வைத்தியம் செய்த காலம் இருந்தது உண்டு. அதை அறிவியல் வளர்ச்சி என்ற நிலையில் உட்படுத்தினோம். வளர்ச்சி என்று இயற்கையினை கொலை செய்தோம். அதன் விளைவு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதனை இந்த வைரஸ் நமக்கு நன்கு புரிய வைத்துள்ளது
உலகையே மாற்றி அமைக்கும் அதிசய ஆயுதம் நம் நாட்டு மருத்துவம் என்பதையும் நமக்கு நினைவு படுத்தியுள்ளது இந்த அதிசய வைரஸ்
நவீன உலகம் நம்மை நோயாளிகளாகவும் மருந்துகளை வாங்கி பயன்படுத்தும் பயனாளிகள் அதுவும் நம்மை மாற்றியுள்ளது, அதிலிருந்து நம்மை மட்டுமன்றி மனித இனத்தை காப்பாற்றுவதற்காக வந்த ஒரு அதிசய ஆயுதம்தான் கொரொனா வைரஸ் அதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது,
அதுமட்டுமன்றி நமது அருமை மிக்க நமது பழைய கலாச்சாரத்தை மீண்டும் புத்துயிர் கொடுக்க வந்தது என கூறினாள் அது மிகை ஆகாது,
தற்போது உலகத்தில் திகழும் மிகப்பெரிய குழப்பமான சூழ்நிலை காரணம் கண்ணில் காண முடியாத உயிர். அதன் பெயர் கொரொனா என்பது அறிந்ததே,
இந்த வைரஸ் பொருள் சிறப்பான தன்மை உடையது,இது மனிதர்களின் தன்மைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றன திறன் உடையதாக இருக்கிறது, அதனால் இதனுடைய உண்மையான தன்மை என்ன என்பதை கண்டுபிடிக்க முடியாமல் வைரஸ் பற்றிய ஆய்வாளர்கள் திணறுகிறார்கள்,
இந்த வைரஸ் இப்படி மாறுவதால் இதனுடைய முதன்மை என்ன என்பது புரிந்துகொள்ளமுடியாத நிலையில் உள்ளது,
முதன்முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் ஒவ்வொரு நாடுகளுக்கும் வருகின்ற பொழுது அந்த நாட்டில் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி களுக்கு என்ப தங்களை மாற்றிக்கொண்டு விட்டதனால் அதற்கு சரியான ஒரே மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவம் சார் மருந்தியல் ஆய்வாளர்கள், திணறுகின்றனர்,
ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தன்மையை காட்டும் இந்த வைரஸ் இந்தியாவில் பல தன்மையை காட்டுகிறது, தற்போது இந்தியாவில் 4 தன்மையுடையதாக ஆய்வுகள் கூறுகின்றன,
1 சீனாவில் நேரடியாக இந்தியாவிற்கு வந்த ஒரு தன்மை வைரஸ்
2 சீனாவிலிருந்து அமெரிக்கா நாடுகளுக்குச் சென்று சாவிற்கு வந்த வைரஸ்
3 சீனாவிலிருந்து ஐரோப்பா நாடுகளுக்கு சென்று அதுக்கு வந்த வைரஸ்
4 சீனாவிலிருந்து இஸ்லாமிய நாடுகளுக்கு சென்று வந்த வைரஸ்
என பிரிக்கப்பட்டுள்ளது,
இன்னும் ஆய்வுகள் எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யும் என்று புரிந்துகொள்ள காலம் இருக்கிறது, தற்போது இதற்கு மருந்துதான் என்ன என்று சிந்திப்போம் ஆனால் இன்றும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை, இது இன்றைய மருந்தியல் ஆய்வாளர்களின் முடிவு,கடைசிவரை இதன் நிலை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன, அதற்கு காரணம் வைரஸின் மனிதனுக்கு ஏற்ப மாறுபடுகின்ற தன்மை ஆகும்,
ஒருவேளை இதற்கான மருந்தை கண்டுபிடித்தாலும் அது உலகில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் என்று கூற முடியாது, ஆகவே அவரவர்கள் அவர்களுக்கு வருகின்ற நோய்களை குணப்படுத்துவதற்கு தற்சார்பு முறையை கையாள வேண்டிய நிலைக்கு உலகம் தள்ளப்பட்டுள்ளது,
இந்த தற்சார்பு நிலை என்பது எற்க்கனவே நம் பாரத நாட்டில் பின்பற்றி வந்த கலாச்சாரம் ஆகும், மட்டும் இன்றி் நமது பாரம்பரிய நாட்டு மருத்துவ முறையும் ஆகும், இதுதான் இந்த உலகத்தையே ஏன் ஒவ்வொரு மனிதனையும் மீண்டும் மீண்டும் இந்த வைரஸ் தொற்றில் இருந்து உடலை காக்கின்ற சிறந்த ஆடையாக இருக்கப்போகிறது என்பதுதான் எதிர்காலம் உண்மை,