பசுக்களின் கண்ணீரைத் துடைத்த திருமூலர்
சில காலங்களுக்கு முன்பு ஊர் மாடுகளை மேய்ப்பதற்கு என்று இடையன் இருப்பதுண்டு. இன்றும் சில கிராம இருப்பதாக கூறுகிறார். அப்படி மாடுகளை மேய்க்கும் மூலன் என்ற ஒரு இடையன் இருந்தான் அவனுடன் தொடா்புடய திருமூலரின் ஒரு உண்மை சம்பவம் தான் இது.
சிவபெருமானிடமும் அகத்தியரிடம் உபதேசம் பெற்றவர்திருமூலர். திருமூலர் சித்திகள் பல கைவரப்பெற்றவர். திருமூலர் கயிலாயத்தில் சிவபெருமான் உடன் இருந்து வந்தார். திருமூலர் கைலாயத்தில் இன்பமாக இருந்தபோதிலும், சிவபெருமான் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த போதிலும், அவருக்கு பொதிகை மலை மீது ஒரு ஆர்வம் இருந்தது, அதனால் அவர் கைலாயத்தை விட்டு பொதிகை மலையை அனுபவிக்க வந்தார்.
திருமூலர் அப்படி வந்த போது ஒருமுறை காவிரி கரை அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கே பசுக்கள் இறை மேயாமல் கூட்டமாய் நின்று அழுது கொண்டிருந்தன. அந்தக் கூட்டத்தை விலக்கிச் சென்று பார்த்த திருமூலர் அந்த காட்சியை கண்டு மிகவும் வேதனைப்பட்டார். அந்தப் பசுவை மேய்க்கும் அந்த இடையன் இறந்து கிடந்தார். அந்த இடையனின் பிரிவை கண்டு சோகத்தில் கண் கலங்கி கண்ணீர் விட்டுக் கொண்டும், அந்த இடத்தையே சுற்றி அழுது கத்திய வண்ணமும் அங்கே சோகமாய் இருந்தன. அந்த பசுக்களை பார்த்த திருமூலர் அவற்றின் மீது இரக்கம் ஏற்பட்டது. அதனால் அவரது மனம் அவரை அறியாமலே தன்னை இழந்தது.
பசுக்களின் துயர்கண்ட திருமூலருக்கு அவற்றின் துன்பம் நீக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் என்னும் உணர்வை மாற்றுதல் என்னும் வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலர் தன்னுடைய உருவத்தில் எழுந்தார்.
இடையன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிரார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகி கரையேறி தங்கள் கிராமம் நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். இதனால் இடையனின் மனைவி அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிட்டாள், திருமூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தான் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.
பின்பு திருமூலர் தன் உடலில் இருக்கும் இடத்தை நோக்கி சென்றார் ஆனால் அங்கே அவரது உடல் இருக்கவில்லை. சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் அவரால் கயிலாயம் செல்ல மனமில்லை.அதனால் அவர் மீண்டும் மூலனின் உடலிலேயே தங்கி திருவாவடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும் நூலை மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் கூறியுள்ளார்.
திருமூலர் இயற்றிய பாடல்கள் வடிவிலான நூல்கள்
1. திருமூலர் காவியம் (கிரந்தம்) – 8000
2. திருமூலர் சிற்ப நூல் – 1000
3. திருமூலர் சோதிடம் – 300
4. திருமூலர் மாந்திரிகம் – 600
5. திருமூலர் சல்லியம் – 1000
6. திருமூலர் வைத்திய காவியம் – 1000
7. திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
8. திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
9. திருமூலர் சூக்கும ஞானம் – 100
10. திருமூலர் பெருங்காவியம் – 1500
11. திருமூலர் தீட்சை விதி – 100
12. திருமூலர் கோர்வை விதி – 16
13. திருமூலர் தீட்சை விதி – 8
14. திருமூலர் தீட்சை விதி – 18
15. திருமூலர் யோக ஞானம் – 16
16. திருமூலர் விதி நூல் – 24
17. திருமூலர் ஆறாதாரம் – 64
18. திருமூலர் பச்சை நூல் – 24
19. திருமூலர் பெருநூல் – 3000
திருமூலர்காக பாண்டிய மன்னன் திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.